கோவை செப்:05
நாட்டின் முதன்மையான மூலப் பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கான கண்காட்சியாக திகழும் ரா மேட் இந்தியா 2024 வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை கொடிசியா தொழில் காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதனை ஒட்டி தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் மெட்டீரியல் ஹேண்டிலிங் உபகரணங்கள் தளவாடங்கள் தொடர்பாக நடைபெறும் நாட்டின் மிகச் சில கண்காட்சிகளில் ஒன்றாக ரா மேட் இந்தியா திகழ்கிறது.
இத்துறை சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை விற்போரும் வாங்குவோரும் சந்திக்கும் வகையிலும் இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் ஆன ஒரு பி2 பி கண்காட்சியாக இது அமைய வேண்டும் என்பதுதான் கொடிசியாவின் நோக்கம் கோயம்புத்தூரில் ஏராளமான சிறு திரு கோயில்கள் நடுத்தர மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன இந்த தொழிற்சாலைகள் தங்கள் தரத்திற்கும் துல்லியமான தயாரிப்பு திறனுக்கும் பெயர் பெற்றவை ஆகும் ஆட்டோமொபைல் டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினியரிங் பவுண்டரி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அடிப்படை கட்டமைப்பு தகவல் தொழில்நுட்பம் விவசாயம் ரயில்வே வான் சார்ந்தவை பாதுகாப்பு எண்ணை மற்றும் எரிவாயு ஆகிய ஆய்வு மற்றும் மேம்பாடு என்று பல துறை சார்ந்த தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அந்த வகையில் மேற்கண்ட தொழிற்சாலைகள் பயன்பெறும் வகையில் நடைபெறும் இந்த கண்காட்சி நாட்டிலேயே முக்கியமான மூலப்பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கான ஒரு கண்காட்சியாக திகழ வேண்டும் என்பது கொடிசியாவின் நோக்கம் இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் அந்த மூன்று நாட்களும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் பார்வையாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்வது அவசியம் இந்த கண்காட்சியில் சுமார் 10,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது சுமார் 150 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த செய்தியை திரு வி சரவணகுமார் தலைவர் ரா மேட் இந்தியா அவர்கள் கலந்து கொண்டனர்.