அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் அறிக்கை
அஞ்சுகிராமம் ஏப்-19
அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவரும், குமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தகவல்தொழில் நூட்ப அணி அமைப்பாளருமான காந்திராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக 23 ஆண்டு மாவட்டக் கழகத்தின் செயலாளராக இருந்து கழகத் தோழர்களை தாய் உள்ளத்துடன் அரவணைத்து கழகத்தை வளர்த்து, பத்தாண்டு தமிழக அமைச்சராக செயல்பட்ட மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன் அவர்களை தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தலைவராக நியமித்துள்ளார்கள். அவர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் முன்னணி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று இன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வடசேரி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள். எனவே கழகத் உடன்பிறப்புக்கள் அனைவரும் திரளாக ஒன்றிணைந்து வரவேற்போம். வாருங்கள்,வாழ்த்துங்கள் என அழைப்புவிடுத்துள்ளார்



