நீலகிரி. ஏப்ரல் 11.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக குன்னூரில் அமைந்துள்ள வெலிங்டன் ராணுவகல்லூரிக்கு வருகை தந்தார் அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வரவேற்றார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இந்திய நாட்டு அதிகாரிகள் மட்டுமின்றி இந்தியாவின் நட்பு நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகிறார் இதற்காக அவர் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு வந்தார் . அதன் பின் அங்கிருந்து ராணுவ பாதுகாப்ப்பு வாகனம் மூலம் பலத்த பாதுகாப்புடன் கோத்தகிரி வழியாக குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வருகை தந்தார் அங்கு மத்திய மந்திரியை ராணுவ உயர் அதிகாரிகள் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பின் ராணுவகல்லூரியில் ஓய்வெடுக்கிறார். ராணுவ பயிற்சி கல்லூரி அதிகாரிகளுடன் மத்திய மந்திரி ராஜநாத் சிங் கலந்துரையாடுகிறார். பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசுகிறார் முன்னதாக வெலிங்டன் போர் நினைவகத்தில் போரில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை



