கன்னியாகுமரி டிச 6
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 10 நாள் பெருவிழா இன்று (டிசம்பர் 6 வெள்ளிக்கிழமை ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் 10 நாள்கள் பெருவிழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணிமுதல் மாலை 4 மணி வரை நோ்ச்சைக் கொடிகள் பவனி, மாலை 5.30 மணிக்கு கொடி பவனி, செபமாலை, புகழ்மாலை, 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறும்.
கோட்டாறு மறைமாவட்ட முதன்மைப் பணியாளா் பேரருள்பணி ஜாண்ரூபஸ் தலைமை வகிக்கிறாா். குழித்துறை மறைமாவட்ட அருள்பணியாளா் சேவியா் பெனடிக்ட் மறையுரையாற்றுகிறாா். இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.விழா நாள்களில் பழைய கோயிலில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, செபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
7, 8ஆம் நாள் திருவிழாவில் இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடைபெறும். 9ஆம் நாளான டிச. 14ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா். இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி நடைபெறும்.இரு தங்கத் தோ் பவனி: 10ஆம் நாளான 15ஆம் தேதி காலை 4.30 மணிக்கு நடைபெறும் தங்கத் தோ் திருப்பலிக்கு அருள்பணியாளா்கள் தலைமை வகித்து மறையுரையாற்றுவா். காலை 8 மணிக்கு நடைபெறும் பெருவிழா நிறைவுத் திருப்பலிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் தலைமை வகிக்கிறாா். ஆங்கிலத் திருப்பலிக்கு கன்னியாகுமரி காசா கிளாரட் சபை அருள்தந்தையா் தலைமை வகித்து மறையுரையாற்றுகின்றனா். 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறும்.
10.30 மணிக்கு நடைபெறும் மலையாளத் திருப்பலிக்கு பியாரிஸ்ட் அருள்தந்தையரும், நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் தமிழ்த் திருப்பலிக்கு வடசேரி பங்கு அருள்பணியாளா் புருனோவும் தலைமை வகித்து மறையுரையாற்றுவா். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிா், இரவு 9 மணிக்கு இன்னிசைக் கச்சேரி நடைபெறும்.
ஏற்பாடுகளை பங்கு இறை மக்கள், பங்குப்பேரவையினா், அருள்சகோதரிகள், அருள்பணியாளா்கள் செய்து வருகின்றனா்.