தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம் மற்றும் உள்வட்டம், மிட்டாநூலஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, ஒன்றியக் குழு உறுப்பினர் கோபால், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சுப்பிரமணி, வட்டாட்சியர் க.சண்முகசுந்தரம், மிட்டாநூலஅள்ளி ஊராட்சிமன்ற தலைவர் பச்சியம்மாள், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்



