கிருஷ்ணகிரி ஏப். 29
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.2 இலட்சத்து 63 ஆயிரத்து 872 மதிப்பில் மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் மற்றும் இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , அவர்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வாரந்தோறும் திங்கட் கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 344 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் 6T60T துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 8 மாற்றுத்திறனாளிகளுக்கு, தலா ரூ.6,359 வீதம் ரூ.50 ஆயிரத்து 872 மதிப்பில் தையல் இயந்திரங்கள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.1,06,500 வீதம் ரூ.2 இலட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் என மொத்தம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 63 ஆயிரத்து 872 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .சா.தனஞ்செயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .ரமேஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) .தர்மராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .பத்மலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .முருகேசன், உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.