பரமக்குடி, ஏப்.19: நேஷனல் ஹெரால்டு நாளிதழின் சொத்து பரிவர்த்தனையில் பண மோசடி நடந்ததாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கில்,
காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை
வன்மையாக கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சரவண காந்தி வரவேற்றார்.பரமக்குடி காந்தி சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் .
மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் பாபு தலைமையிலும் மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ராஜன்,மாநில பேச்சாளர் ஜெய்னுல் ஆலம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்
பரமக்குடியில் ஒன்றிய பாஜக
அரசை கண்டித்து காங்கிரஸ்ர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்