பரமக்குடி,டிச.20 : பரமக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்தில் அவமதித்து பேசியதை கண்டித்து. தொடர்ந்து இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்நடைபெற்று வருகிறது. இளம் தொடர்ச்சியாக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து, அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், மாவட்ட கழக துணை செயலாளர் கருப்பையா பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் டி அருளானந்த், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சன் சம்பத்குமார்
உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கிளை கழகச் செயலாளர்கள் அனைத்து அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பட விளக்கம்
பரமக்குடியில் அம்பேத்கரை அவமதிப்பாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக திமுக சார்பில் எம் எல் ஏ முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.