மதுரை
எஸ்.ஆர்.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2025 ஆண்டிற்கான பிரமாண்ட ப்ராஜெக்ட் கண்காட்சி
கல்லூரி முதல்வர் முனைவர்
S.துரைராஜ் தலைமையில் துணை முதல்வர் முனைவர்
S.சம்பத், மற்றும் எஸ்.ஆர்.எம். மதுரை குழு ஒருங்கிணைப்பாளர்.M. மனோகரன். ஆகியோர் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் கல்லூரி மாணவர்கள், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து சுமார் 300 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆர்டிபீஸியல் இன்டெலிஜென்ஸ், இன்டர்நெட் ஆப்.திங்ஸ், மற்றும் பசுமை தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, இமேஜ் பிராஸசிங் போன்ற துறைகளில் தங்கள் புதுமையான திட்டங்களை வெளிப்படுத்தினர்.
மேலும்
இந்த நிகழ்விற்கு
மதுரை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர்
V.அருண்.
சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு
மதிப்பு மிக்க கருத்துகளை மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து
எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் முனைவர்
C.விமலா ராணி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ம்யூனிகேஷன் துறைத் தலைவர் முனைவர்
P.தார்சிஸ், ஆகியோரால்
இந்த கண்காட்சியை ஒருங்கிணைப்பு
செய்திருந்தனர்.
விழா நிறைவில் கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி
முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோரால்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
பரிசுகளை வழங்கி மகிழ்வித்தனர்.
மேலும்
இந்த கண்காட்சி மாணவர்களுக்கு மொழிநுட்பப் புதுமைகளை வெளிப்படுத்தும் வகையில் இது ஒரு மிகச்
சிறந்த தளமாக அமைந்திருந்தது.