திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு வட்டாரத்தில் உள்ள வாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு பற்றியும், ரத்த சோகை வராமல் தடுப்பது பற்றியும், மேலும் கர்ப்ப காலம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின்னரான பராமரிப்பு பற்றியும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளையின் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மருத்துவர் பிரபாகரன், செவிலியர்கள் , ஆதிச்செல்வன் மற்றும் ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் சைமன்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.



