தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட தென்னிந்திய நாடக நடிகர் சங்க கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் பண்ணை எம்.பி.சிங்காரவேலன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு
நடிகர் சங்க ஒருங்கிணைப்பாளர் திரைப்பட நடிகர் எம்.முருகபிரகாஷ் முன்னிலை வகித்தார்.இதில் நடிகர் சின்னாளப்பட்டி அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவரும், நடிகருமான சு.பாண்டித்துரை மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் துணைத்தலைவர்கள் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது.