தருமபுரி, அக்டோபர் 21 –
ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதியன்று இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர் வீர வணக்க நாள் (Police Commemoration Day) அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்திற்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) பாலசுப்பிரமணியம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஸ்ரீதரன், துணை காவல் கண்காணிப்பாளர், ஊர்க்காவல் படைத்தலைவர், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.



