தக்கலை, பிப்- 12
தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் அருள்ராஜ் (56). இவர் நாகர்கோவில் போக்குவரத்துக் காவல் துறையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக வெரிகோஸ் நோய் தாக்கம் இருந்தது. இதனால் ஸ்டீபன் அருள்ராஜ் கால் வலியால் அவதிப்பட்டதா கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவர் கடந்த டிசம்பர் மாத 24 ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். வருகிற 19-ம் தேதி மீண்டும் பணிக்கு செல்ல வேண்டிய நிலையில் ஸ்டீபன் அருள்ராஜுக்கு நோய் பாதிப்பு குறையாது நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய நிலையில் ஸ்டீபன் அருள்ராஜ் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்று அங்குள்ள பலா மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இன்று காலை அவரது மனைவி வயோலா தோட்டத்திற்கு வந்தபோது மரத்தில் கணவர் தூக்கில் தொங்கவதை பார்த்து கூச்சலிட்டு அழுதார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் விரைந்து வந்து ஸ்டீபன் அருள்ராஜை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பான தக்கலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் சம்பவம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.