திருப்பத்தூர்:ஆக:28, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றால் வேப்பமரம் பாரம் தாங்காமல் முறிந்து விழுந்தது. இதனை கண்ட பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கிரீன் கமிட்டி மாவட்ட உறுப்பினர் சத்யராஜ் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அந்த மரத்திற்கு அதே இடத்தில் உயிர் கொடுத்து மீண்டும் நட்டு தண்ணீர் ஊற்றினார். முறிந்து விழுந்த மரம் பல நூற்றாண்டுகள் வாழ வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் சமூக ஆர்வலரின் இந்த செயல் அனைவரையும் ஈர்த்தது. காவல்துறையினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.



