கரூர் மாவட்டம் – ஜூன் – 12
கரூரில் அடிப்படை வசதி செய்து கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் சின்னாக் கவுண்டனூர் பகுதியில் பட்டியலின மக்கள் சுமார் 120 குடும்பத்திற்கு மேல் வசித்து வரும் இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் அந்த பகுதியைச் சார்ந்த ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.