ஊத்தங்கரை அருகே கோர்ட் உத்தரவு படி ஆக்கிரமிப்பை அகற்றம் செய்ய மனு
ஊத்தங்கரை அடுத்து நடுப்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட எட்டிப்பட்டி அடுத்த காமராஜர் நகரில் வசித்து வரும் கோவிந்தன் மகன் திருக்குமார் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணியிடம் மனு அளித்தார்.
அம்மனுவில் கூறியிருந்தது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து நடுப்பட்டு பஞ்சாயத்து எட்டிப்பட்டி அடுத்த காமராஜர் நகரில் வசித்து வரும் கோவிந்தன் மகன் திருக்குமார் என்பவர் நிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பில் என்னுடைய பட்டா இடத்தில் 14 ஆவது நிதி குழு மானியத்தில் தார் சாலை ரோடு போடப்பட்டுள்ளது, இதுதொடர்பாக (திருக்குமார்) நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்து வழக்கில் எனக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது, இதனால் இந்த தார்சாலை ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றி தரவேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.