கோவை டிசம்:01
கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பாக துணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300 வியாபாரிகள் கட்டுமான பொருட்கள் மற்றும் சில்லறை மொத்த விற்பனை செய்து வருகின்றனர். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் 4 மணி முதல் 8 மணி வரை கனரக வாகனங்கள் லாரிகள் செல்வதற்கு அனுமதி இல்லை என்ற காவல் விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் கனரக வாகனங்கள் அந்தந்த இடங்களுக்கு பொருட்களை விநியோகிக்க முடிவதில்லை மேலும் அன்றாட கட்டுமான செயல்பாடுகளுக்கும் கான்கிரீட் போடப்படும் சமயங்களில் அவசர தேவைகளுக்கும் கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்ல முடிவதில்லை என்பதால் இலகு ரக வாகனங்களில் அந்த பொருட்கள் அந்த நேரங்களில் விநியோகித்து வருகிறோம். இது குறித்து கடந்த 22.6. 2023 ஆம் தேதி அன்று தங்களிடம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் கட்டிட பொறியாளர்கள் சங்கம் அவர்களுடன் மனு அளித்தோம் அந்த மனுவை பரிசீலித்து வாகனங்களை தடை இன்றி இயக்க அதிகாரிகளிடம் வாய்மொழி உத்தரவு அளித்தீர்கள் இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அந்த வேலை சிறப்பாக செய்து வந்தோம் ஆனால் தற்போது மூன்று தினங்களாக மீண்டும் போக்குவரத்துக் காவலர்களால் இணைய வழி அபராதம் அந்த LMV வாகனங்களுக்கும் விதிக்கப்படுகிறது.
இது வருடத்திற்கு சுமார் 20000 முதல் 25 ஆயிரம் வரை நாங்கள் வாகனங்களை FC செய்ய அனுப்பும்போது அந்த நேரத்தில் எங்களுக்கு பாரமாக இருக்கிறது கட்டிட செயல்பாடுகளுக்கு LMV வாகனங்கள் தேவை மிகவும் அவசியமானது கட்டிட இடுப்பாடுகள் சுத்தம் செய்தல் கட்டிடக்கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துதல் போன்ற வேலைகளுக்கு சிறிய LMV வாகனங்களின் தேவை அவசியமாகிறது.
இவ்வாறு அபராதம் விதிக்கப்படுவதால் நாங்கள் மிகவும் பாதிப்பு அடைகிறோம்.
ஆகையால் LMV வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதிலிருந்து எங்களுக்கு விளக்கு அளித்து தொடர்ந்து கட்டுமான செயல்பாடுகள் தடைபடாமல் நடைபெற உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என எங்களது சங்கம் சார்பாக கோவை உதவி காவல் ஆணையாளர் (DC) டிராபிக் அவர்களிடம் இச்சங்கத்தை சேர்ந்த தலைவர் அருண்குமார், செயலாளர் மாதவன், பொருளாளர் செல்வகுமார், மற்றும் உறுப்பினர்கள் இம்மனுவை வழங்கினர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர் என தெரிவித்தனர்.