ஜூலை 24
கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பாக நிறுவனத் தலைவர் காட்டன் சக்திவேல்
மாவட்ட செயலாளர் சௌந்தர்ராஜன் மாவட்ட பொருளாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில். திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வட்டம், கதவு எண். 6, செந்தல் நகர் வடக்கு, காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் என்ற முகவரியில் வசிக்கும் ரமேஷ் பிரியங்கா மகன் பிரஜித் வயது (4) ரமேஷ் சிறு வியபாரம் செய்து வருகிறார். இவர் வறுமை கோட்டிற்கு கீழ் மிகவும் பின்தங்கி இருக்கிறார். இவர் தினமும் சிறுவியாபாரம் செய்தால் தான் இவருடைய தின செலவுகள் செய்ய முடியும். இவருடைய குழந்தை பிரஜித், கடந்த ஒன்றரை வருடமாக அப்லாஸ்டிக் அமோனியா நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனை, வேலூர் மருத்துவமனை, சென்னை குழந்தைகள் மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் பார்த்தோம். இறுதியாக கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் எங்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் ரூ.18,00,000/- (ரூபாய் பதினெட்டு இலட்சம்) செலவு ஆகும் என்று எங்களுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்கள். எங்களால் அந்த அளவிற்கு செலவு செய்யும் சூழ்நிலை எங்களுக்கு இல்லை.
எங்கள் குழந்தையை காப்பாற்ற சிறு வியாபாரியாகிய என்னுடைய குழந்தையை காப்பாற்ற கருணை செய்து முதலமைச்சர் நேரடி பார்வைக்கு எடுத்து சென்று எனது குழந்தையை காப்பாற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.