மதுரை மே 21,
மதுரையில் பரிபூரண விநாயகர் கோவில் கும்பாபிஷேகம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உபகோயிலான அருள்மிகு பரிபூரண விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. அருள்மிகு பரிபூரண விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் வேத மந்திர முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று பரிபூரண விநாயகரை தரிசனம் செய்தனர்.



