திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்கா அலங்கியம் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு.
_______
பிப்:18
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்கா அலங்கியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அலங்கியம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அலங்கியம் வருவாய் துறை அதிகாரி மூலம் அலங்கியம் மேட்டுக்காடு பகுதியில் இலவச வீடு இல்லாத பெண்கள் விண்ணப்பம் செய்தால் உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாக தெரிவித்ததின் பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் அலங்கியம் வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் இஸ்லாமிய பெண்கள் மனு கொடுத்தனர். அதற்குப் பிறகு நவம்பர் 28ஆம் தேதி தாராபுரம் வட்டாட்சியர் அவர்களிடம் இஸ்லாமிய பெண்கள் மனு கொடுத்தனர். உடனடியாக அலங்கிய வருவாய் அலுவலர் மனு கொடுத்தவர்களை அழைத்து விசாரித்ததில் அலங்கியம் பகுதியில் 44 இடங்கள் உள்ளது என தெரிவித்தார்.இதனை தொடர்ந்து உடனடியாக வட்டாட்சியர் அவர்கள் வீடு இல்லாத இஸ்லாமிய பெண்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் தற்போது அலங்கியம் மேட்டுக்காடு பகுதியில் இஸ்லாமிய பெண்களுக்கு இலவச இடம் வழங்க முடியாது என அரசு அதிகாரிகள் தெரிவித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான இஸ்லாமிய பெண்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி அலங்கியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர். அழகர்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.மேலும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வீடு இல்லாத இஸ்லாமிய பெண்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர்.தமிழ் வேந்தன்,நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர்.தம்பி முருகானந்தம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர்.சுப்பையா, ஆட்டோ தொழிற்சங்க செயலாளர்.மாரிமுத்து உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.