நீலகிரி, பிப்:25. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் தமிழகத்தில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு உரிய நிதியை தர மறுத்து வருவதாக மத்தி அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைசெயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார், தந்தைபெரியார் திராவிட கழகத்தின் பொறுப்பாளர் ஜெயக்குமார் கண்டன உரை யாற்றினர். மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொருளாளர் ரவி, நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேஷ், ரத்ததான நண்பர்கள் குழுவை சேர்ந்த செல்வம் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்,தொடர்ந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மும்மொழி கொள்கையை எதிர்த்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர், இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோத்தகிரி தாலுகா செயலாளர் மணி,திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அர்ஜூணன் உள்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி ரவீந்திரன் நன்றி கூறினார்



