தஞ்சாவூர் மாவட்டம் மேல திருப்பந்துருத்தியில் மக்கள் நேர்காணல் முகாம். 86 பயனாளிகளுக்கு ரூபாய் 2.37 கோடியில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
தஞ்சாவூர் பிப்.21.
தஞ்சாவூர் மாவட்டம் மேலதிருப்பந்துருத்தி யில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 86 பயனாளிகளுக்கு ரூபாய் 2.37 கோடியில்நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்டம் மேல திருப்பந்துருத்தியில் . மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது முகாமில் முரசொலி எம்பி, துரை சந்திரசேகரன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் அனைத்து துறை சார்பில் 86 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரத்து 119 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கி பேசினார் .அப்போது அவர் கூறியதாவது:
பொதுமக்கள் தமிழக அரசின் அனைத்து துறைகளின் திட்ட விவரங்களை அறிந்து கொள்வதற் கு இது போன்ற முகாம்கள் பயன் படுகிறது. அனைத்து துறை அலுவலர்கள் துறை சார்ந்த திட்ட விவரங்களை விளக்குவதற்கும், இந்த முகாமில் கோரிக்கை மனுக்க ளுக்கு உடனடி தீர்வு காண்பதன் வாயிலாக திட்ட பணிகளை விரைந் து மேற்கொள்ள முடிகிறது முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை பெற அனைவரும் தவறா மல் விண்ணப்பிக்க வேண்டும் தொழிலாளர் நல வாரியஅட்டை பெற அனைத்து தொழிலாளர் களும் விண்ணப்பிக்க வேண்டும் என கூறினார்
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, உதவி . ஆட்சியாளர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சங்கர் ,மாவட்ட வழங்கள் அலுவலர் கமலக்கண் ணன், உதவி செயற்பொறியாளர் (நீர்வளம் )சிவக்குமார் திருவையாறு தாசித்தார் தர்மராஜ் திமுக ஒன்றிய செயலாளர் கவுதமன், பேரூராட்சி தலைவர் ஜாபிரின் ரோஜா துணைத் தலைவர் அகமது மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.