நாகர்கோவில் நவ 19
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் கலந்து கொண்ட சுனிதா மற்றும் தர்மராஜ் ஆகியயோருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மூன்று சக்கர சைக்கிள் கேட்ட கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளி ராஜம் என்பதற்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில் வேல் முருகன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சேக் அப்துல்காதர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாரதி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து
கொண்டார்கள்.