நாகர்கோவில் நவ 5
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுடைய கோரிக்கையை மனுவாக வழங்கி வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் மனுவினை மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி தீர்வு கிடைக்க வழிவகை செய்து வருகிறார். இவ்வாறு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்க வரும் பொதுமக்களுக்காக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வடிவீஸ்வரம் அரசு மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்ற மக்களை தேடி மருத்துவம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் மனு வழங்க வரும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த
நேசமணி நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுவாமி தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அருகில் இருந்தவர்களையும், மாவட்ட ஆட்சியரை சந்திக்க வரிசையில் நின்றவர்களையும் அழைத்து சுகர் மற்றும் பிரஷர் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அவரின் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானோர் தங்களை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
இதுகுறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பெண் ஒருவர் தெரிவிக்கையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்திக் கொடுத்தது தங்களுக்கு பயனுள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர் .