கிருஷ்ணகிரி: அக்டோபர் :29:கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 324 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் (அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை) கடைபிடிப்பதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழியான, நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.
அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்
எனவே, நான்
* அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன்
என்றும்,
* இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும்,அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும்,
பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும்,
* தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை முன்னுதாரணமாகச் செயல்படுவேன் என்றும், வெளிப்படுத்துவதில் ஒரு
* ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .புஷ்பா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) .சுந்தராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .ரமேஷ்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.