தென்காசி மாவட்டம் கருத்துக்கல்வலசையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றம் சார்பில் தலைவர் சத்யராஜ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களிடம் பேசும் போது பொதுமக்கள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும் மழை நீரை சேமிக்க வேண்டும் மேலும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் அப்போதுதான் நீரை சேமிக்க முடியும் தேவைக்கு மட்டுமே தண்ணீரை பயன்படுத்த வேண்டும் வீணாக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்தில் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஊராட்சி செயலர் சமுத்திரம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்



