தென்காசி மாவட்டம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய குளத்து மண்ணை தனியாருக்கு விற்பனை செய்த திமுக நிர்வாகிகளை கண்டித்து செய்தி வெளியிட்ட நமது அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக பேரூராட்சி மன்ற தலைவர்
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பெரியகுளத்திற்கு வரவேண்டிய தண்ணீரின் மதகுகளை அடைத்து மண் அள்ளிய செய்தி வெளியிட்ட நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் செய்தியாளர் குத்தாலபெருமாளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன்
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பெரியகுளம் பகுதியில் தண்ணீர் வரக்கூடிய மதகுகளை அடைத்து மண் எடுத்து அதனை செங்கல் சூளை மற்றும் தனியார் ஃப்ளாட்களுக்கும் விற்பனை செய்த ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற துணை தலைவர் நாலாயிரம் எ பாப்பா என்பவரின் கணவர் சாமி ஆகியோரின் திரை மறைவு வேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழின் (02 08 2024) அன்று செய்தி பிரசுரமாகி இருந்தது,
இதனையடுத்து ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் செய்தியாளர் குத்தாலப் பெருமாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரையும் செய்தி நிறுவனத்தையும் அவதூறாகவும் ஒருமையிலும் பேசி மிரட்டல் தோனியில் பேசினார் இதனால் செய்தி நிறுவனத்தையும் பத்திரிக்கையாளரையும் அவதூறாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இதன் பின்னர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமாரிடம் குத்தாலபெருமாள் சக பத்திரிக்கையாளர்கள் மற்றும் கழக வழக்கறிஞர் சுப்பிரமணியன் உடன் மனு அளித்தார்
அந்த மனுவில் தன்னையும் தன் நிறுவனத்தையும் அவதூறாக பேசி அரசியல் அமைப்பில் உள்ள பத்திரிகை சுதந்திரத்தை மீறி பத்திரிகை தர்மத்தை பறிப்பதாகும் மேலும் எதிர் மனுதாரர் ஆளுங்கட்சி தரப்பை சேர்ந்தவர் என்பதால் அவரால் எனக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை பரிசீலித்த காவல் கண்காணிப்பாளர் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.



