களியக்காவிளை, நவ- 27
கிள்ளியூர் தொகுதி மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி அகிலா (40). ஊராட்சி அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதி ஓடான் விளையை சேர்ந்தவர் ரவீந்திரன் (59). ஆட்டோ டிரைவர். இவருக்கும் ஜெகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஜெகன் அந்த பகுதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ரவீந்திரன் திடீரென ஜெகனை கம்பால் அடித்து, உதைத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஜெகன் அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அகிலா களியாக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ரவீந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.