மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 1.12.2024 ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்வில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் .எஸ்.எஸ். சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் .செஞ்சி கே.எஸ்.மஸ்தான், டாக்டர் இரா.இலட்சுமணன், .அன்னியூர் அ.சிவா, சிறப்பு கண்காணிப்பு அலுவலர் / நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன்,.., முதன்மைச் செயலாளர்/ போக்குவரத்துத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் .சுன்சோங்கம் ஜடக் சிரு,., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி, , உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



