தஞ்சாவூர்.மார்ச் 25.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் ரூபாய் 3.17 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தையும்,புதிய வழித்தடத்தில் பேருந்துகளையும் அமைச்சர்கள் கே .என். நேரு, கோவி.செழியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார் ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி தலைவர்ம.க. ஸ்டாலின் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து ,நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பேசியதாவது:
ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில் 20 23-2024 ஆம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம் பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 3.17 கோடி மதிப்பில் அனைத்து கட்டமைப்புகளும் கூடிய புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதைத்தொடர்ந்து 10 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் கே.என். நேரு ,கோவி..செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் க அன்பழகன் (கும்பகோணம்) துரை.சந்திர சேகரன் (திருவையாறு) டி.கே.ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் கும்பகோணம் துணை மேயர் சுப. தமிழழகன் ,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி ,மண்டல செயற்பொறியாளர் ஜீவாசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



