தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அனைத்து துறையைச் சார்ந்த முதல் நிலை அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர் வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகள் தங்கள் நில உடைமை களை சரி பார்க்கும் வகையில் அக்ரி ரிஜிஸ்டர் ஆப்பில் பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்துதல், பெல்ரம்பட்டி நெடுஞ்சாலை மேல் தெரு பகுதியில் சாலையில் உள்ள பள்ளத்தினை சரி செய்ய வேண்டும். ஐந்தாவது மைல் கல் கிராமத்தில் திருநங்கைக்களுக்கான புதிய குடியிருப்பு கட்டும் பணிகளில் முறையற்ற பயனாளிகளை பட்டியலில் சேர்த்து உள்ளதை பரிசீலனை செய்யவும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் அரசு விதிகளுக்கு புறம்பாக 700 சதுர அடியில் இருந்து 1,000 சதுர அடி வரை கட்டுமான பணிகளை மேற்கொள்வதை சுட்டி காட்டி அதிகாரிகளை கண்டித்தார். அதேபோல் சுகாதார இணை இயக்குனர் சாந்தி, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க கேட்டுக் கொண்டார். மேலும் பாலக்கோட்டையில் முதல்வர் மருந்தகத்தில் ஆட்சியர் ஆய்வு செய்து மருந்துகளின் விவரங்கள் மற்றும் மருந்து, மாத்திரைகள், இருப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பாலக்கோடு தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் ராஜாங்கம்மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics