ராமநாதபுரம், ஜூன்,21-
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பொக்கனாரேந்தல் மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் 58 ஆம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து மாடுபிடி அனுபவ வீரர் 200 பேருக்கு சீருடை வழங்கினார். இதில் தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், ராமநாதபுரம் நகராட்சி துணை தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றனர். பிரம்மாண்டமான மைதானத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பாராட்டைப் பெற்றனர். விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எருதுகட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி திருப்புல்லாணி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவசாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.