மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை
தமிழ்நாடு பொதுபணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர்
எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மேம்பாலப்பணிகளை வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க பணிகளை விரைவு படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தலைமைப் பொறியாளர், சென்னை சத்யபிரகாஷ், சிறப்பு தொழில் நுட்ப அதிகாரி சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர், மதுரை ரமேஷ் மற்றும் கோட்டப் பொறியாளர் மதுரை மோகன்காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.



