தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவிலில் பூலித்தேவர் படத்திற்கு
வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதைதென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து மாமன்னர் பூலித்தேவர் 309 வது பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் பூலித்தேவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட பொருளாளர் சரவணன் ,நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை, பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் ,மாவட்ட அயலக அணி அமைப்பாளர் அமிதாப், மற்றும் வீமராஜ்,சதிஷ், ஜெயகுமார், வீரமணி , ஜான்சன், ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.