தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் கே. பி. அன்பழகன் தலைமையில் ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, இளைஞரணி செயலாளர் சங்கர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய கழக சார்பில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமையில் ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.



