மத்திய பாரதிய ஜனதா அரசின் முறையற்ற ஜிஎஸ்டி வரி வரிவிதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழில் ஏற்றுமதி மட்டுமில்லாமல் உள்நாட்டு உற்பத்தி தொழிலும் மிகவும் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில் வணிக கட்டிடங்களுக்கான வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பது வணிகர்களின் குரல்வலை நசுக்கி வணிகத்தொழிலை அளிக்கும் செயலாகும்.
திருப்பூர் மாநகராட்சியின் அநியாய வரி உயர்வு சாமானிய மக்கள் முதல் சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலையிலும் சுமத்தி வருகிறார்கள். இதனை கண்டித்து திருப்பூரில் அனைத்து வியாபார சங்கங்களின் பேரவை மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் வருகிற 18-ஆம் தேதி நடத்தும் கடையடைப்பு மற்றும் தொடர் போராட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.