மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை மற்றும் பயணிகள் காத்திருக்கும் அறையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் திறந்து வைத்தார்கள். மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மண்டலம் 2 வார்டு எண்.33 மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் தாய்மார்களுக்கான பாலூட்டும் இரண்டு அறைகளும், ரூ.17.68 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பயணிகள் காத்திருக்கும் அறை புதிதாக அமைக்கப் பட்டுள்ளது. பயணிகள் காத்திருக்கும் அறையில் சுமார் 20 பயணிகள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள், மின்விசிறிகள், மின்விளக்கு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மார்களுக்கான பாலூட்டும் இரண்டு அறைகள், ஒரு பயணிகள் காத்திருக்கும் அறையினை மேயர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன்.மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, நகர்நல அலுவலர் மரு.இந்திரா, உதவி ஆணையாளர் கோபு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் சேகர். உதவி செயற்பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார். மாமன்ற உறுப்பினர் மாலதி, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



