திருப்பத்தூர்:ஆக:06, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏ.கே மோட்டூர் ஊராட்சி அண்ணா நகரில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்நிகழ்விற்கு ஏ.கே.மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பு.வேலு வரவேற்புரை ஆற்றினார். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாச்சலம், ஒன்றிய குழு உறுப்பினர் ராமலிங்கம் , காஞ்சனா சிவப்பிரகாசம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஊராட்சி செயலாளர் வசந்தி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



