அரியலூர், ஜூன்:13
அரியலூர் மாவட்டம்,செந்துறை அருகே கோட்டைக்காடு வெள்ளாற்றில் அணுகு சாலை அமைக்கக் கோரிய கூட்டமைப்பு நிருவாகிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அமைதிப்பேசுவார்த்தை நேற்று காலை 10 மணிக்கு செந்துரை வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
போராட்டக் குழுவினர் : உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி, நல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம், விசிக விவசாய பிரிவு பாலசிங்கம், ஆர். விசுவநாதன்,தமிழ் பேரரசு கட்சி திருச்சி மண்டல செயலாளர் முடிமன்னன், அ. எழிலரசன், க. குமார், மாரிமுத்து, எம். கே. பரமசிவம், கே. கே. ஆர். ஆனந்தராஜ், செல்வராசு, பழனிவேல், கே ராசேந்தின், பிரகாஷ், விக்னேஷ், கிரி, கோகுல், ஆகியோர் கலந்துகொண்டனர்.
உயர்மட்ட மேம்பாலத்தின் அணுகு சாலைப் பணிகளை விரைந்து முடித்துச் செப்டம்பர் 2024 ம் மாதத்திற்குள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என ஒப்பந்ததாரர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் உறுதி அளிக்கப்பட்டதை போராட்டக்குழு அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட முடிவுகளின் படி 20-6-2024 அன்று நடைபெற இருந்த கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது என போராட்டக்குழு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.