நாகர்கோவில், ஜன. 8 –
கன்னியாகுமரி மாவட்டம், இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் லெனின்ஸ்டு கட்சி சார்பில் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடைபெற்றது. இந்தியாவில் வடமாநிலங்களில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் கிறிஸ்தவர்கள் அமைத்திருந்த கிறிஸ்துமஸ் குடில்கள், அலங்காரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை அடித்து உடைத்து தீயிட்டு கொளுத்தி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட மதவெறி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுத்து இந்திய இறையாண்மையை பாதுகாக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஐயப்பன் ஒன்றிய அரசை கண்டித்து உரை ஆற்றினார். அகில இந்திய பெண்கள் விடுதலை கழகம் மாவட்டத் தலைவர் சியாமளா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜன், சுரேஷ், சுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.



