சென்னை, கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4 காவல்நிலையம் நிர்வாக வசதி, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாக பிரிக்கப்பட்டு, மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் புதிதாக வானகரம் காவல்நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சென்னை கூடுதல் கமிஷனர் பிரவஷ்குமார் காவல்நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் கல்யாண், கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன், உதவி ஆணையர்கள் பாலகிருஷ்ணபிரபு , செம்பேடுபாபு, ஆய்வாளர்கள் மகேஸ்வரி, பூபதிராஜ், கோபி மற்றும் துணை ஆய்வாளர் ரஜீத், திருவேற்காடு நகர்மன்ற உறுப்பினர் 18வது வார்டு கவுன்சிலர் விக்னேஸ்வரன் (எ) விக்கி, மேனாள் மாமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளருமான நூம்பல் எஸ்.கந்தசாமி மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.