மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 35 பயனாளிகளுக்கு ரூ.35 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி வழங்கினார்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், சோக்காடி, அகசிப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி மற்றும் பெரியமுத்தூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.3 கோடியே 47 இலட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் . மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு எல்லாருக்கும் எல்லாம் என்பதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து ஊரகம், நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வசதி, மின் விளக்கு, கழிவு நீர் கால்வாய் அமைத்தல், உயர்மட்ட மேம்பாலம் அமைத்தல், பழுதான தார் சாலைகள் சீரமைத்தல், புதிய தார் சாலை அமைத்தல் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்று கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், சோக்காடி ஊராட்சியில் குள்ளமுனியன் கொட்டாய் முதல் ஜம்பூத் சாலை வரை 0/0-1/7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 30 இலட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலும், பெரியமுத்தூர் ஊராட்சியில், அக்ரஹாரம் முதல் நெற்குந்தி சாலை வரை ரூ.1 கோடியே 65 இலட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.34 இலட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.16 இலட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் கணினி வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம் (2023-2024) கீழ், ரூ.23 இலட்சத்து 25 ஆயிரத்து 702 மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு புதிய அவசர ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, தலா ரூ.1,01,800 வீதம், 35 பயனாளிகளுக்கு ரூ.35 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா, மாவட்ட வன அலுவலர் .பகான் ஜெகதீஷ் சுதாகர் ., ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் .கோ.நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் .கீதாராணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .பன்னீர்செல்வம், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பூவதி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் .மலர்விழி, வட்டாட்சியர் .வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சிவபிரகாசம், .உமா சங்கர், கண்காணிப்பாளர் மரு.சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவர் மரு.செல்வராஜ், மருத்துவர்கள் மரு.மது, மரு.தனசேகரன் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள்

Leave a comment