தஞ்சாவூர் மே 23.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு கூடுதல் இடங்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித் திருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 அரசு கலை அறிவியல் கல்லூரி களில் இளநிலை பட்ட வகுப்பில் சேர்வதற்கு மே 27 தேதி வரை www.tngasa.inஎன்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி யில் இளநிலை பாடப்பிரிவுகளில் சுழற்சி 2 – இல் 4 புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன பி ஏ இலக்கியம் (60 )பிஎஸ்சி உயிர் வேதியல் தமிழ் வழி (40 )பிஎஸ்சி உயிரி தொழில்நுட்பவியல் ஆங்கில வழி (40) பிஎஸ்சி விலங்கியல் ஆங்கில வழி (40) குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரியில் சுழற்சி – 2 இல் 7பாட பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ள ன பிபிஏ (60) பிஎஸ்சி, வேதியல், தமிழ் மற்றும் ஆங்கில வழி (தலா 40 )பிஎஸ்சி விலங்கியல் தமிழ் மற்றும் ஆங்கில வழி (தலா 40 ) பிஎஸ்சி தாவரவியல் தமிழ் மற்றும் ஆங்கில வழி (தலா 40 )
கும்பகோணம் அரசு மகளிர் கலைக்கல்லூரி சுழற்சி – 2இல் பிகாம் ஆங்கில வழி (60) பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி சுழற்சி – 1 இல் பி ஏ பொருளியல் ஆங்கிலவழி(70) பிஏ அரசியல் அறிவியல் (70) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன
கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுழற்சி- 2 இல் ஆங்கில வழியில் பிபிஏ (50) பிசிஏ (40 ) பிஎஸ்சி வேதியியல் (30) பிஎஸ்சி இயற்பியல், விலங்கியல் (தலா 35 )பிஎஸ்சி கணினி அறிவியல் (40)
ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1120 இடங்களும் ,திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 240 இடங்களும் உள்ளன
புதிதாக தொடங்கப்பட்டுள்ள திருவிடைமருதூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் (50) பிகாம் சிஏ ஆங்கில வழி (60) பிகாம் பேங்கிங் மட்டும் இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட் ஆங்கில வழி (60) பிஎஸ்சி மனை அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல் ஆங்கில வழி (50) பிஏ குற்றவியல் மற்றும் அரசியல் ஆங்கில வழி (50) ஆகிய 5 பாடங்கள் இடம் பெற்றுள்ளன
மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக கல்லூரி கல்வி இயக்கத்தை044-24343106,24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.



