முதுகுளத்தூர், மே 3
முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், முதுகுளத்தூர் முதல் மதுரை வரை செல்வநாயகபுரம், கீரனூர் மற்றும் அபிராமம் வழியாக பேருந்து இயக்கப்படுகிறது.
இதனை தமிழக வனத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனின் நடவடிக்கையில் வந்தது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பயணிகள் ஆகியோர் தினசரி முதுகுளத்தூர் இறுதி மதுரை அதாவது செல்வநாயகபுரம், கீரனூர் மற்றும் அபிராமம் வழியாக தேவையை தெரிவித்திருந்தனர். அந்தக் கோரிக்கையை மனதில் கொண்டு, அமைச்சர் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு இந்த புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பெருமளவில் கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கவிருக்கின்ற இந்த சேவையை பொதுமக்கள் பெரிதும் வரவேற்று வருகின்றனர்.