2024 என்.சி.சி “பி சர்டிபிகேட் ” தேர்வு மதுரையில் நடைபெற்றது. இதற்கான செய்முறை, எழுத்து தேர்வில் , கலசலிங்கம் பல்கலை என்.சி.சி குழுவிலிருந்து 23 மாணவர்களும் 10 மாணவிகளும் பல்கலை என்சிசி தலைவர் போத்தி நாதன் தலைமையில் கலந்து கொண்டனர். தேர்வு முடிவில் அனைத்து 33 பேரும் வெற்றி பெற்றனர். 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்த என்சிசி மாணவர்களை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன், துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் வி.வாசுதேவன் ஆகியோர்பாராட்டினர்



