வேலூர்_11
வேலூர் மாவட்டம் ,வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அகில இந்திய தொழிற்சங்க மையம் ஏஐசிசிடியு வேலூர் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. ஆர். பாத்திமா, எஸ். மகேஸ்வரி, எம் . திருக்குமரன், ஜி. மலர் எஸ் .பரத், எஸ் .வாசுதேவன், கே. மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர்கள் சீ.அ. சிம்பு தேவன் ,மா. சரோஜா, பூ.சரவணன், பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் க. பரசுராமன் ஆகியோர் சிறப்பு உரையாற்றினர். உடன் அகில இந்திய வேலூர் தொழிற்சங்க மைய கவுன்சில் ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



