மதுரை ஜனவரி 26,
மதுரையில் தேசிய வாக்காளர் தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை, திருப்பாலையில் உள்ள இ.எம்.ஜி யாதவா மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா.பேசியதாவது:-இந்திய தேசம் மிகப்பெரிய ஜனநாயக தேசம் ஆகும். பொதுமக்கள் தங்களை ஆளக்கூடிய தலைவர்கள் தேர்தல் முறையில் தாங்களே தேர்வு செய்ய முடியும். இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை பல முன்னேறிய நாடுகளே உற்றுக் கவனிக்ககூடிய வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர்களாக தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும். வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் தேர்தல் நடைமுறைகள் குறித்தும், இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். வாக்குரிமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதை தலையாய கடமையாக கருதி கட்டாயம் வாக்களித்திட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் எந்தவிதமான தூண்டுதலுக்கும் ஆட்படாமல் சுயமாக சிந்தித்து ஆளுமை மிக்க தலைவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கிட முடியும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பேசினார். முன்னதாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, புதிய வாக்களார்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையையும். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர்க்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி, மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மதுரை வருவாய் கோட்டாட்சியர் ரதஷாலினி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயந்தி, இ.எம்.ஜி யாதவா மகளிர் கல்லூரி தாளாளர் போத்தி ராஜா, முதல்வர் முனைவர்.விபுஷ்பலதா உட்பட அரசு அலுவலர்கள் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.