இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேற்று தேசிய தலைவர் தேவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுமக்கள் காத்திருப்போர் கூடத்தை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அரசு கூடுதல் தலைமைச் செயலர் மங்கத் ராம் சர்மா. மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் பரமக்குடி சார் ஆட்சியர் செல்வி.அபிலாஷா கெளர், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.



