நாகர்கோவில், அக். 31 –
நாகர்கோவில் மேலபெருவிளை பகுதியில் தொடர் மின் வெட்டால் அவதிப்படும் பொதுமக்கள்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் மின் வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மேலபெருவிளை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இப்பகுதியில் மின் விநியோகம் என்பது நாள் முழுவதும் வழங்கப்படாமல் தினந்தோறும் காலை மதியம் இரவு என குறிப்பிட்ட பல மணி நேரம் மின் வெட்டு ஏற்படுவதாகவும் இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் இதை பற்றி மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் கூறாமல் இப்பொழுது வந்துவிடும் என அலட்சியமாக பதில் தெரிவிப்பதால் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
மேலும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற மின்வெட்டு ஆளும் திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு செயலாற்றி வருகிறது. எனவே தொடர்ந்து மின்வெட்டை ஏற்படுத்தி வரும் மின் கம்பிகளை உதவி மின் பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்து நிரந்தர தீர்வை ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.



