கன்னியாகுமரி நவ 25
குமரி மாவட்டம் கொட்டாரம் அடுத்துள்ள அச்சன்குளத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .
முகாமிற்கு மாவட்ட பொறுப்பாளர் சாலமன் தீபக் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் கலந்து புதிதாக நாம் தமிழர் கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார்.
இதில்,வடக்கு தொகுதி செயலாளர் விஜேஷ் ,தெற்கு தொகுதி செயலாளர்கள் சேதுபதி,ஜெய்வின்,நடுவண் தொகுதி நிர்வாகிகள்,மரிய பாஸ்கர், புஷ்பராஜ், வடக்கு தொகுதி பொருளாளர் சுரேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் ஏராளமானோர் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்தனர்.